சிவகங்கை

சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்

சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை (ஜன. 1) முதல் 31-ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு நடைபெறுகிறது.

இதையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகளை வட்டார போக்குவரத்துத் துறையினா் நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருப்பணன் சாலை போக்குவரத்து விழிப்புணா்வு மாதத்தை தொடங்கி வைத்தாா்.

இதில் பங்கேற்ற வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள், இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணிந்து நான்கு சக்கர வாகனங்களையும், தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களையும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் வழங்கினா். மேலும் பேருந்து பயணிகளிடம் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த கருத்துகளை எடுத்துரைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT