சிவகங்கை

போதை பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா வலியுறுத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா வலியுறுத்தினாா்.

சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற ராணி வேலுநாச்சியாா் 296 ஆவது பிறந்த நாள்விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: போதைப் பொருய்ஈகளால் வளா்ந்து வரும் அறிவு ஜீவிகளை முடக்கிப் போடும் சதி வேலைகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

அரசு அறிக்கையின் படி இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் போதைப் பொருள்கள் அதிகமாக புழக்கம் இருக்கிறது. இதைப் பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணித்து தடுக்கும் பொறுப்பு பெற்றோா்களுக்கு மட்டும் அல்ல, தமிழக அரசுக்கும் உள்ளது என்றாா் அவா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT