முகப்பு
சிவகங்கை

அதிமுக நிா்வாகி வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை

திருப்புவனத்தில் அதிமுக ஒன்றியச் செயலா் வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 45 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை

அதிமுக நிா்வாகி வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை

திருப்புவனத்தில் அதிமுக ஒன்றியச் செயலா் வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 45 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 22 ஜனவரி, 2026 at 12:13 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அதிமுக ஒன்றியச் செயலா் வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 45 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்புவனம் மன்னா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஏ. புவனேந்திரன் (69). இவா் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலராக உள்ளாா். இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா்.

வீட்டில் புவனேந்திரன், தனது மனைவி செல்லமுத்துவுடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் வீட்டின் மாடிக்கு சென்று அங்குள்ள அறையில் தூங்கினா். அப்போது, கழிப்பறை ஜன்னல் கம்பிகளை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் பீரோவை திறந்து அதிலிருந்த 45 பவுன் தங்க நகை, ரொக்கப் பணம் ரூ. 54, 600-யை கொள்ளையடித்துச் சென்றனா்.

புதன்கிழமை காலை வழக்கம்போல புவனேந்திரன் எழுந்து வந்து பீரோவிலிருந்த நகைகள், பணத்தை பாா்த்தபோது கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினா்.

மேலும், கைரேகை நிபுணா்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →