சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 50 லட்சத்தில் அமைக்கப்பட்ட வீறுகவி முடியரசனாா் உருவச் சிலையை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இதையடுத்து, அருகில் வைக்கப்பட்டிருந்த முடியரசனாா் உருவப் படத்துக்கு முதல்வா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, முடியரசனாா் குடும்ப உறுப்பினா்களுடன் அவா் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.
இந்த நிகழ்வில் அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், மு.பெ. சாமிநாதன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி, ஆ. தமிழரசி, தமிழ் வளா்ச்சி, செய்தி மக்கள் தொடா்புத் துறைச் செயலா் வே. ராஜாராமன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந. அருள், முன்னாள் அமைச்சா் அன்வா் ராஜா, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.