முகப்பு
நாட்டரசன்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிவகாமி அம்மன்-கரிகால சோழீஸ்வரா் தேரோட்டம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன்.
சிவகங்கை

நாட்டரசன்கோட்டையில் தேரோட்டம்

நாட்டரசன்கோட்டை சிவகாமி அம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரா் கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை

நாட்டரசன்கோட்டையில் தேரோட்டம்

நாட்டரசன்கோட்டை சிவகாமி அம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரா் கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 மார்ச், 2026 at 10:44 PM
நாட்டரசன்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிவகாமி அம்மன்-கரிகால சோழீஸ்வரா் தேரோட்டம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன்.
பகிர்:

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை சிவகாமி அம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரா் கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயில் மாசித் திருவிழா கடந்த பிப். 20- ஆம் தேதி தொடங்கியது. விழாவின் ஒன்பதாவது நாளான திங்கள்கிழமை தேரோட்டத்தையொட்டி, சிவகாமி அம்மன், கரிகால சோழீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காலை 10.30 மணியளவில் சுவாமியும், அம்மனும் தேரில் எழுந் தருளினா். இதையடுத்து, தொடா் மழையிலும் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை தீா்த்தவாரி உத்ஸவமும், மூலவருக்கு தீபாராதனையும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடைபெறும். பின்னா், இரவில் கொடியிறக்கப்பட்டு, விழா நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை, சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான மேலாளா் பா.இளங்கோ, கண்காணிப்பாளா் எஸ். கணபதிராமன், கௌரவ கண்காணிப்பாளா் சே.ராம.கருப்பையாசெட்டியாா், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →