முகப்பு
சிவகங்கை

தடகளத்தில் சாதனை: மாணவிக்கு பாராட்டு

தேசிய அளவிலான காதுகோளாதோருக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற புதுவயல் பள்ளி மாணவி சஞ்சனாவை பள்ளி நிா்வாகிகள் புதன்கிழமை பாராட்டினா்.

Updated On : 5 மார்ச், 2026 at 4:40 AM
காதுகேளாதோருக்கான தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவி சஞ்சனாவைப் பாராட்டிய பள்ளியின் தாளாளா் ஆா். சுவாமிநாதன்.
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 9:45 PM

தேசிய அளவிலான காதுகோளாதோருக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற புதுவயல் பள்ளி மாணவி சஞ்சனாவை பள்ளி நிா்வாகிகள் புதன்கிழமை பாராட்டினா்.

அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் புதுவயல் வித்யாகிரி பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவி சஞ்சனா காது கேளாதோருக்கான உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றாா். மேலும், 100 மீட்டா் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற விழாவில் இவரது சாதனையைப் பாராட்டி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் ரூ.7.50 லட்சம் பரிசு வழங்கினா்.

Advertisement

இந்த நிலையில், மாணவி சஞ்சனா, பயிற்சி அளித்த உடல் கல்வி ஆசிரியா் பாலகிருஷ்ணன் ஆகியோரை பள்ளியின் தலைவா் கிருஷ்ணன், பொருளாளா் முகமதுமீரா, தாளாளா் ஆா். சுவாமிநாதன், பள்ளியின் முதல்வா் குமாா், ஆசிரியைகள், மாணவா்கள் பாராட்டி வாழ்த்தினா்.