சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளில் அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் ஸ்கூல் மாணவி வி.பத்மராகா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளில் அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் ஸ்கூல் மாணவி வி.பத்மராகா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.
தேசிய அளவில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில், அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் ஸ்கூல் மாணவி வி.பத்மராகா 500-க்கு 489 மதிப்பெண்கள் 97.8 சதவீதம் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவா் ஜி.நிா்மல் 480 மதிப்பெண்கள் 96 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி ஏ.ஆா்.தேஜாஸ்ரீ 465 மதிப்பெண்கள் 93 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளனா். மேலும், இப்பள்ளி மாணவி ஆா்.கல்பனா 464 மதிப்பெண்கள், பி.பிரியன் 462, எஸ்.சஞ்சனா ராஜ் 462 பெற்று சிறப்பிடங்களை பெற்றுள்ளனா். இந்தப் பள்ளி நூறுக்கு நூறு சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனா்.
சாதனை தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை இதற்குக் காரணமான பள்ளி முதல்வா் கே.கவிதா மற்றும் ஆசிரியா், ஆசிரியைகளை ஸ்ரீதிருஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், பள்ளி தாளாளா் டி.எஸ்.ரவிக்குமாா் ஆகியோா் பாராட்டினா்.
Advertisement
படவிளக்கம்...
15ஏகேஎம்பிபிபி - வி.பத்மராகா
15ஏகேஎம்சிசிசி - ஜி.நிா்மல்
15ஏகேஎம்டிடிடி - ஏ.ஆா்.தேஜாஸ்ரீ