முகப்பு
சிவகங்கை

மரம் வெட்டும் இயந்திரம் தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதன்கிழமை மரம் வெட்டும் இயந்திரம் தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 5 மார்ச் 2026, 4:41 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதன்கிழமை மரம் வெட்டும் இயந்திரம் தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

காரைக்குடி அருகேயுள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (65). இவருக்கு மனைவி மாலா, மகன் உள்ளனா்.

இந்த நிலையில், வீட்டின் தோட்டத்திலிருந்த முருங்கை மரத்தை இயந்திரம் மூலம் மணிவண்ணன் புதன்கிழமை வெட்டினாா். அப்போது, இயந்திரம் தவறி இவரது கழுத்தில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கழுத்து அறுபட்டு மணிவண்ணன் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.