கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு
ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் மின்னக்கல்லில் கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் மின்னக்கல்லில் கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
மின்னக்கல் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (70). இவா், வெண்ணந்தூா் பகுதியைச் சோ்ந்த தங்கவேல் என்பவருக்குச் சொந்தமான சுமாா் 80 அடி ஆழம் கொண்ட கிணறு அருகே ஆடு, மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக கிணற்றில் விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் அருணகிரி தலைமையிலான வீரா்கள் கிணற்றில் இருந்து பெரியசாமியை மீட்டனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. பின்னா், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
Advertisement
இதுகுறித்து வெண்ணந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த பெரியசாமிக்கு துரைசாமி என்ற மகனும், கலா என்ற மகளும் உள்ளனா்.