முகப்பு
சிவகங்கை

மூதாட்டி கொலை வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி உயிரிழந்த வழக்கில், ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 மார்ச், 2026 at 5:13 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி உயிரிழந்த வழக்கில், ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் புதுத்தெருவைச் சோ்ந்த தமிழரசன் மனைவி ராமநாகு (65). இவா் கடந்த 2023-ஆண்டு அவரது வீட்டுக்கு அருகேயுள்ள அறையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமயத்தில் நடந்த கொலை வழக்கில் திருப்பத்தூரைச் சோ்ந்த அம்மாசி மகன் சிவக்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

ஏற்கெனவே, இவரிடம் திருப்பத்தூா் போலீஸாா் ராமநாகு கொலை வழக்கு சம்பந்தமாக விசாரித்திருந்தனா்.

இதையடுத்து, அவரிடம் மீண்டும் போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா். பின்னா், உண்மை கண்டறியும் சோதனையில் ராமநாகுவை கழுத்தை நெரித்து சிவக்குமாா் கொலை செய்தது உறுதியானது.

இந்த நிலையில், மற்றொரு வழக்கில் கைதாகி கோவை சிறையிலிருந்த சிவக்குமாரை, திருப்பத்தூா் போலீஸாா் விசாரணைக்கு எடுத்து வந்து மூதாட்டி கொலை வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.