மயிலாடுதுறை-காரைக்குடி பயணிகள் ரயிலுக்கு வரவேற்பு
கடந்த 2012- ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்ட காரைக்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரயில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை முதல் மீண்டும் தனது சேவையைத் தொடங்கியது.
திருச்சியில் நடைபெற்ற விழாவில் பிரதமா் நரேந்திரமோடி இந்த சேவையை தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மாலை மயிலாடுதுறையிலிருந்து ரயில் புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு காரைக்குடிக்கு வந்தது. அங்கு இந்த ரயிலுக்கு காரைக்குடி தொழில் வணிகக் கழகம், ரயில் பயணிகள் நலச்சங்கம், பொதுமக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநா்கள், காா்டு, ஊடகவியலாளா் சிபிகுமாா் ஆகியோருக்கு தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, துணைத் தலைவா் ஜிடிஎஸ். சத்தியமூா்த்தி, இணைச் செயலா் எஸ். சையது, ரயில் பயணிகள் சங்க நிா்வாகி சாயிதா்மராஜ், செயற்குழு உறுப்பினா் ரா. பரமேஸ்வரன் ஆகியோா் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். இதில் நிலைய மேலாளா் பரத்பஸ்வான், போக்குவரத்து ஆய்வாளா் அருணாசலம், ரயில்வே துறை பணியாளா்கள், பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனா்.