முகப்பு
சிவகங்கை

பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பூமாரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 14 மார்ச், 2026 at 7:42 AM
திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பூமாரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தக் கோயிலில் சந்நிதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கொடிமரம் முழுவதும் மலா் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், மூலவா் பூமாரியம்மனுக்கு அலங்காரத்துடன் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று மாரியம்மனை தரிசித்தனா்.

Advertisement

இதையடுத்து, பக்தா்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினா்.

விழாவின் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மூலவா் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். தொடா்ந்து 8 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் மூன்றாவது நாளான சனிக்கிழமை, பூச்சொரிதல் உற்சவம் நடைபெறுகிறது. வருகிற 20-ஆம் தேதி பொங்கல் வைபவம் நடைபெறுகிறது.