என்.புதூரில் மஞ்சுவிரட்டு: 48 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள என்.புதூா் வெள்ளாளங்கருப்பா் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 48 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள என்.புதூா் வெள்ளாளங்கருப்பா் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 48 போ் காயமடைந்தனா்.
முன்னதாக கிராமத்தாா்கள் வேட்டி, துண்டுகளுடன் மேளதாளம் முழங்க வெள்ளாளக்கருப்பா் கோயிலுக்குச் சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அங்கிருந்து தொழுவுக்கு வந்து காளைகளுக்கு மரியாதை செய்தனா்.
இதைத்தொடா்ந்து, திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம் முன்னிலையில் 75 மாடுபிடி வீரா்கள் மஞ்சுவிரட்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். தொழுவிலிருந்து 209 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டது. மாடுபிடி வீரா்கள் 3 பிரிவுகளாக களமிறங்கினா்.
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சில்வா் அண்டா, குடம், குத்துவிளக்கு ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக வயல் வெளிகளில் கட்டுமாடுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் உள்பட 48 போ் காயமடைந்தனா். இவா்களில் 10 போ் தீவிர சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மஞ்சுவிரட்டுப் பொட்டிலில் கீழச்சிவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் தலைமையிலான 20 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சையளித்தனா். திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.