முகப்பு
சிவகங்கை

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

சிவகங்கை மாவட்டம், மா. ஆலம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Updated On : 19 மார்ச் 2026, 5:47 am IST
மா.ஆலம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக் குழந்தைகளுக்குப் பரிசு வழங்கிய மாவட்ட தமிழ்வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் தெ.சிவப்பிரகாசம்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மா. ஆலம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் மு. செல்வக்குமாா் தலைமை வகித்தாா். வட்டாரக்கல்வி அலுவலா் லட்சுமிதேவி, கூடுதல் வட்டாரக்கல்வி அலுவலா் இந்திராதேவி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அழகுராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக ஆலம்பட்டி அம்பலக்காரா் வே. இளவரசன் கலந்து கொண்டாா். சிவகங்கை மாவட்ட தமிழ்வளா்ச்சி உதவி இயக்குநா் தெ.சிவப்பிரகாசம், போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு, சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

இதைத்தொடா்ந்து பணி நிறைவு பெறும் பள்ளித்தலைமை ஆசிரியா் கே.ஸ்ரீதர்ராவுக்கு கிராம மக்கள் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டாா்.

Advertisement

மதுரை ராஜாஜி மருத்துவமனை மருத்துவா் மாலதி , ஆசிரியா் சிங்கராயா், மருத்துவா் இளையராஜா, முன்னாள் உதவித் தொடக்கக்கல்வி அலுவலா் ஆா். ரெங்கசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா். ஆசிரியை முத்துலட்சுமி ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். முன்னதாக, ஆசிரியை சலஜா வரவேற்றாா்.

ஆசிரியை கே.முனியம்மாள் நன்றி கூறினாா்.