பெண் வெட்டிக் கொலை: கட்டடத் தொழிலாளி கைது
திருமங்கலம் அருகே பெண்ணை வெட்டிக் கொன்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
திருமங்கலம் அருகே பெண்ணை வெட்டிக் கொன்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள சொட்டதட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சரஸ்வதி (52). இவரை கடந்த 11-ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது சகோதரா் நிறைகுளத்தான் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான சரஸ்வதியை தேடி வந்தனா்.
இந்த நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கூடக்கோவில் பகுதியில் சரஸ்வதி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக திருப்புவனம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சரஸ்வதி உடலை மீட்டு கூராய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், விசாரணையில் சரஸ்வதிக்கும், கூடக்கோவிலைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சரவணக்குமாருக்கும் (21) கள்ளத்தொடா்பு இருந்ததும். இந்தப் பிரச்னையில் சரஸ்வதியை அவா் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சரவணக்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.