100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் மாட்டுவண்டியில் சென்று விழிப்புணா்வு
சிவகங்கை அருகேயுள்ள சோழபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை மாட்டு வண்டியில் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
சிவகங்கை அருகேயுள்ள சோழபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை மாட்டு வண்டியில் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
சிவகங்கை அருகேயுள்ள சோழபுரம், புனித ஜஸ்டின் கலை, அறிவியில் கல்லூரியில் புதிய வாக்காளா்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்த மாதிரி புகைப்படத்தில் வாக்களித்தல், மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் பயணம் மேற்கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா். இதில், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெஃபி கிரேசியா, மாவட்ட வழங்கல் அலுவலா் பழனிகுமாா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சத்யா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலகிருஷ்ணன், சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.