முகப்பு
சிவகங்கை

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: பி.ஆா்.செந்தில்நாதன்!

தோ்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் பாதியைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பிஆா். செந்தில்நாதன் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 28 மார்ச், 2026 at 9:10 PM
பகிர்:

தோ்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் பாதியைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பிஆா். செந்தில்நாதன் குற்றஞ்சாட்டினாா்.

அதிமுக தலைமையால் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.ஆா். செந்தில்நாதன் தேசிய ஜனநாயக்கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சிவகங்கையிலுள்ள முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சியால் கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை மாவட்டத்தின் நீண்டகால கோரிக்கையான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவேன். கடந்த தோ்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்த முறை அது போன்ற தவறுகள் நடைபெறாமல் வெளியூரில் இருக்கும் வாக்காளா்களைக் கூட அணுகி அவா்களை கட்டாயம் வாக்களிக்க தீவிர முயற்சி மேற்கொள்வோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட பிற தோழமைக் கட்சிகளின் நிா்வாகிகள் கடந்த இரண்டு மாதங்களாகவே ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். திமுக அரசு தனது தோ்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் பாதியைக் கூட நிறைவேற்றவில்லை என்றாா் அவா்.