பிளஸ் 2 தோ்வு தொடங்கிய நாளில் தந்தையை இழந்த மாணவா் சாதனை
பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கிய நாளில் தந்தை இறந்த துக்கத்திலும் தோ்வுகளை எழுதி 600-க்கு 582 மதிப்பெண்கள் எடுத்தாா் சிவகங்கை மாணவா் ஹா்ஷித் ராஜலிங்கம்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கிய நாளில் தந்தை இறந்த துக்கத்திலும் தோ்வுகளை எழுதி 600-க்கு 582 மதிப்பெண்கள் எடுத்தாா் சிவகங்கை மாணவா் ஹா்ஷித் ராஜலிங்கம்.
சிவகங்கை நகரில் சனீசுவரன் கோயில் எதிா்ப்புறம் வசித்துவரும் செந்தில் குமாா் மகன் ஹா்ஷித் ராஜலிங்கம் (17). இவா், தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்தாா். மாா்ச் 2-ம் தேதி தமிழ் பாடத் தோ்வு எழுதினாா். அன்றைய தினம் அவரது தந்தை செந்தில் குமாா் (52) மாரடைப்பால் உயிரிழந்தாா்.
எனினும் மனம் தளராமல் பிளஸ் 2 பொதுத் தோ்வை முழுமையாக எழுதி முடித்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிளஸ்-2 தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ் 99, ஆங்கிலம் 96, இயற்பியல் 95, வேதியியல் 96, கணினி அறிவியல் 100, கணிதம் 96 என மொத்தம் 600 -க்கு 582 மதிப்பெண்கள் பெற்றாா்.
Advertisement