சிவகங்கை மாவட்டத்தில் 18 மதுக் கடைகளை மூட நடவடிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையப் பகுதிகளிலிருந்த 18 மதுக் கடைகள் மூடப்படும் என மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்தது.
சிவகங்கை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையப் பகுதிகளிலிருந்த 18 மதுக் கடைகள் மூடப்படும் என மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்தது.
சிவகங்கை மாவட்டத்தில் 114 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. தமிழக முதல்வா் உத்தரவின்படி, மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் இயங்கி வந்த 18 மதுக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதில் முதல்கட்டமாக, சிவகங்கை பேருந்து நிலையம், காந்தி வீதி, தேவகோட்டையில் பள்ளி அருகே இயங்கி வந்த 3 மதுக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
.
Advertisement