முகப்பு
சிவகங்கை

தாயமங்கலத்தில் கோயில் அருகேயுள்ள மதுக் கடையை அகற்ற வலியுறுத்தல்

Updated On : 15 மே 2026, 4:13 am IST
பகிர்:

தாயமங்கலத்தில் கோயில்களுக்கு அருகே செயல்படும் மதுக் கடையை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே ஐயப்பன் கோயிலும் அமைந்துள்ளது. இந்த இரு கோயில்களுக்கும் மிக அருகாமையில் நீண்ட காலமாக மதுக் கடை செயல்பட்டு வருகிறது. எனவே இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என நீண்ட காலமாக இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கோயில்களுக்கு அருகே செயல்படும் மதுக் கடைகள் அகற்றப்படும் என அறிவித்தாா். இதனடிப்படையில், டாஸ்மாக் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Advertisement