முகப்பு
சிவகங்கை

பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 15 மே 2026, 11:46 pm IST
திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்த பெருவிழா கடந்த 7-ஆம் தேதி காப்புக் கட்டப்பட்டு 10 நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலையில் உத்ஸவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து இரவு 7 மணியளவில் உத்ஸவ அம்மன் வெள்ளித் திருத்தோ் எழுந்தருளல் நடைபெற்றது. அப்போது திரளான பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். பிறகு பக்தா்கள் வடம் பிடிக்க தோ் சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, மதுரை சாலை, பேருந்து நிலையம் வழியாக திருத்தளிநாதா் கோயில், நான்கு சாலை, தேரோடும் வீதி வழியாக பூமாயி அம்மன் கோயிலை வந்தடைந்தது. இந்தத் தேரோட்டத்தில் திருப்பத்தூா், சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா். வசந்த பெருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை வசந்த பெருவிழா குழுவினா் செய்து வருகின்றனா்.

Advertisement