தேனி

கம்பத்தில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

DIN

கம்பத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கேரளத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் புதன்கிழமை  இரவு  கைது செய்தனர்.
  எர்ணாகுளம் மாவட்டம்,  புதுவையைச் சேர்ந்தவர் அசோகன் மகன் அருண்குமார் (26).  திருச்சூர் மாவட்டம், கொடுங்காநல்லூரைச் சேர்ந்தவர் காதர் அலி மகன் சலாம் (34).  இவர்களை கம்பம், கோம்பைச் சாலை பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து ஒன்றே கால் கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அருண்குமார்,  சலாம் ஆகியோருக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கம்பம்  உலகத் தேவர் தெருவைச் சேர்ந்த மாயாண்டி மகன் ஜெயபாண்டி (37)  என்பவர் மீது போலீஸார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT