வீரபாண்டியில் ராட்டினம் ஏற்றிச் சென்ற லாரி உரசியதில் மின் கம்பங்கள் சேதம்
வீரபாண்டியில் புதன்கிழமை ராட்சத ராட்டினத்தின் பாகங்களைச் ஏற்றிச் சென்ற லாரி உரசியதில் 10 மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
வீரபாண்டியில் புதன்கிழமை ராட்சத ராட்டினத்தின் பாகங்களைச் ஏற்றிச் சென்ற லாரி உரசியதில் 10 மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
வீரபாண்டியில் சித்திரைத் திருவிழாவையொட்டி கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் பொழுது போக்கு மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ராட்சத ராட்டினம் நிறுவுவதற்காக, அதன் பாகங்களை ஏற்றிச் சென்ற லாரி மின் கம்பம் ஒன்றின் மீது உரசியது. இதில், மின் கம்பங்களை இணைத்திருந்த வயர்களை இழுக்கப்பட்டு, அடுத்தடுத்து இருந்த 10 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.இத்தகவலறிந்து வந்த மின் வாரியப் பணியாளர்கள் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைத்தனர்.
இதுகுறித்து வீரபாண்டி
காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.