தேனி

மக்கள் தொடர்பு முகாமில் 45 பேருக்கு நலத் திட்ட உதவி

DIN

தேனி அருகே பூமலைக்குண்டு கிராமத்தில் புதன்கிழமை மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமை வகித்தார். பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். 
இம்முகாமில் வருவாய்த் துறை,  மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தோட்டக் கலைத் துறை, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை ஆகியவற்றின் சார்பில் 45 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.13.55 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் ரசிகலா, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT