தேனி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

DIN

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் துறையினரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தேனியில் அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
தேனி பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலர் சி. சடையாண்டி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி. வெங்கடேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே. ராஜப்பன், சங்கரசுப்பு, ஏ.வி. அண்ணாமலை, ஜி.எம். நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுப் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துணைக் கண்காணிப்பாளரை கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம்:  பழனி பேருந்து நிலைய ரவுண்டானாவில் வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர கழகம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT