முகப்பு
தேனி

கேரளத்துக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்துவதற்காக தமிழக எல்லை குமுளி வனப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை,

Updated On : 9 ஜூலை, 2018 at 7:50 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கேரளாவுக்கு கடத்துவதற்காக தமிழக எல்லை குமுளி வனப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 தேனி மாவட்டம், கூடலூர், கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் கேரள மாநிலம் குமுளி மலைப்பாதை வழியாக ரேஷன் அரிசி கடத்துவதாக உத்தமபாளையம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை, குமுளியில் உள்ள தமிழக எல்லைப் பகுதியில் அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சாலையோர வனப்பகுதியில் அடர்ந்த செடி, கொடிகளுக்கு இடையே 25 கிலோ எடையில், 20 சாக்கு பைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 
அவற்றை கைப்பற்றிய, வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான ஊழியர்கள் உத்தமபாளையத்தில் உள்ள உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் அவற்றை பதுக்கி வைத்தவர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.