தேனி

சுருளி அருவிப் பகுதியில் பைக் திருடிய கார் ஓட்டுநர் கைது

DIN

கம்பம் செல்லாண்டியம்மன் கோயிலைச் சேர்ந்த பாண்டியன் மகன் சேர்மன்சாமி (28). தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர், நண்பருடன் வெள்ளிக்கிழமை சுருளி அருவியில் குளிக்க தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அருவியில் குளித்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லையாம். இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, மோட்டார் சைக்கிளை திருடியதாக, கம்பம் வனச்சரகர் அலுவலக சாலையைச் சேர்ந்த அய்யர் மகன் கார் ஓட்டுநர் கார்த்திக் (38) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT