தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
க.புதுப்பட்டி பகவதியம்மன்கோயில் தெருவை சேர்ந்த முருகன் மகன் முனீஸ்வரன்(26),கூலி வேலை செய்கிறார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், சுந்தரபாண்டி மற்றும் சிலர் சேர்ந்து முனீஸ்வரனை வழிமறித்து தாக்கி காயப்படுத்தினராம். சில ஆண்டுகளுக்கு முன்கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதலை மனதில் வைத்துதாக்கியதாக, முனீஸ்வரன் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சார்பு ஆய்வாளர் இத்ரிஸ்கான் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திக் மற்றும் சுந்தரபாண்டியை கைது விசாரித்து வருகின்றனர்.