தேனி

தேனியில் பெண்ணிடம் நகை பறிப்பு

DIN

தேனியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 4 பவுன் சங்கிலியை,  இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றுள்ளனர். 
    பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி சௌமியா பிரித்தி (25). இவர், தேனி நகராட்சி கர்னல் பென்னிகுவிக் நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து, சிவாஜி நகர் நோக்கி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, சௌமியா பிரித்தியை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் அணிந்திருந்த 4  பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
    இது குறித்து சௌமியா பிரித்தி அளித்த புகாரின்பேரில், தேனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT