தேனி மாவட்டம் கம்பத்தில் குடியிருப்பு பகுதியில் அரசு மதுபானக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள நகராட்சி ஆடு அடிக்கும் தொட்டி, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அரசு மதுபானக் கடைகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு, இப்பகுதியில் குடியிருந்து வரும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், செவ்வாய்க்கிழமை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். கம்பம் வடக்கு சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது குடியிருப்பு பகுதிக்குள் கடைகளை திறக்க அனுமதிக்க மாட்டோம், கடைகளை திறக்க மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும், இல்லையென்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் எனக்கூறி கலைந்து சென்றனர்.