தேனி

போடியில் 2 நாள்களாக சாரல் மழை மின்னல் தாக்கி வேப்ப மரம் முறிந்தது

DIN


போடி அருகே வெள்ளிக்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் வேப்ப மரம் முறிந்து விழுந்தது.
போடியில் வெள்ளிக்கிழமை இரவில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் போடி அருகே கரட்டுப்பட்டி பகுதியில் மின்னல் தாக்கியது இதில் அங்கிருந்த சுமார் 50 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் முறிந்து விழுந்தது. அப்போது மின்னல் தாக்கிய சத்தம் சுமார் 1 கிமீக்கும் அப்பால் வரை கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மரத்தின் அருகே கால்நடைகள் கட்டப்பட்டிருந்தன. அதிர்ஷ்டவசமாக அவை உயிர் தப்பின. இதையடுத்து முறிந்து விழுந்த பழமையான வேப்ப மரத்தை கிராம மக்கள் வந்து பார்த்துச் செல்கின்றனர். இதைத் தொடர்ந்து போடி பகுதியில் சனிக்கிழமையும் லேசான சாரல் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT