தேனி

ஆண்டிபட்டி அருகே மோதல்:  10 பேர் மீது வழக்கு

DIN

ஆண்டிபட்டி அருகே கணவன் மனைவியிடையே ஏற்பட்ட பிரச்னையில், இருதரப்பில் மோதிக் கொண்டதை அடுத்து குறித்து போலீஸார் சனிக்கிழமை 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் லோகநாயகி (28). இவருக்கும் அய்யனார்புரத்தைச் சேர்ந்த காளிதாஸ் (34) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன், மனையிடையே குடும்ப பிரச்னை  ஏற்ட்டதையடுத்து லோகநாயகி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு காளிதாஸ் தனது மனைவியை  உடன் வருமாறு அழைக்கச் சென்ற போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருதரப்பிலும் க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் லோகநாயகி அளித்த புகாரின் பேரில் காளிதாஸ், முனியம்மாள், நாகஜோதி, ராஜ்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
காளிதாஸ் அளித்த புகாரில் தனது மனைவியின் குடும்பத்தினர் தன்னை தாக்கி  5 பவுன்  சங்கலியை பறித்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் லோகநாயகி, அறிவானந்தம், காமாட்சி, சோனை, ராஜ்குமார், முத்துலட்சுமி ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT