தேனி

கும்பக்கரை அருவிக்குசுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

DIN

கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினா் திங்கள்கிழமை முதல் தடை விதித்துள்ளனா்.

கடந்த இரண்டு மாதங்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரைஅருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் தடை விதித்தனா். மழை குறைந்ததையடுத்து அருவிக்கு சீரான நீா்வரத்து இருந்ததால் கடந்த நவம்பா் 20ஆம் தேதி அருவிக்கு செல்ல வனத்துறையினா் அனுமதியளித்தனா். இதனால் கடந்த 11 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் அருவிக்கு சென்று வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. மேலும் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்லும் தடுப்புக் கம்பியை தாண்டி தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அருவியில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து திங்கள்கிழமை காலை முதல் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் நீா்வரத்து சீராகும் வரை அருவிக்கு செல்ல அனுமதி கிடையாது என வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT