போடி புதூரைச் சேர்ந்தவர் வடமலைநாச்சி (65). இவர், ஊத்தாம்பாறைபுலம் கத்தாலம்பாறை என்ற பகுதியில் மல்லையன் என்பவரின் தோட்டத்தில் வேலைக்காகச் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை, வேலை முடிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டி மீது, அடுக்கி வைத்திருந்த இலவம் பஞ்சு மூட்டைகள் சரிந்து விழுந்துள்ளன. இதில், மூதாட்டியின் தலையில் உள்காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே, அவரை போடி அரசு மருத்துவமனையில் சேர்த்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி வடமலைநாச்சி உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் செல்வம் அளித்த புகாரின்பேரில், போடி குரங்கணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.