தேனி

சாலை விபத்தில் இளைஞர் சாவு

DIN

கடலாடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார். 
கடலாடி வட்டம் காவாகுளத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டி மகன் ஜெகதீஸ்வரன் (20).இவர், மேலக்கிடாரத்திலிருந்து தனது ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வேகமாகச் சென்றாராம். சாலை வளைவில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஜெகதீஸ்வரன் கீழே விழுந்துள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை சௌந்தரபாண்டியன் அளித்த புகாரின்பேரில், கீழச்செல்வனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT