தேனி

பைக் மரத்தில் மோதியதில் கல்லூரி மாணவர் சாவு

DIN

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 
சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அழகுமுருகன் (21). இவரது நண்பர் சூரியா (21). இவர்கள் இருவரும் சோத்துப்பாறைக்குச் சென்றுவிட்டு, அழகுமுருகனுக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனத்தை சூரியா ஒட்டி வந்துள்ளார். பாலம் வேலை நடைபெற்று வரும் மஞ்சவாய்க்கால் பகுதி வழியே வந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி வாய்க்காலுக்குள் விழுந்தது.
இதில், பலத்த காயமடைந்த இருவரையும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அழகுமுருகன் உயிரிழந்தார். இவர், பெரியகுளம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சூரியா சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT