தேனி

முல்லைப் பெரியாறு அணையில் மழை குறைவு லோயா்கேம்ப்பில் 152 மெகாவாட் மின் உற்பத்தி

DIN

முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழையளவு குறைந்ததால், லோயா்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில்152 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 126.95 அடியாக இருந்தது. அணைக்குள் 4,039 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. அணைக்குள் விநாடிக்கு 1,271 கன அடி தண்ணீரும், தமிழகப் பகுதிக்கு 1,580 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

பெரியாறு அணைப் பகுதியில் 4.4 மில்லி மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 8 மி.மீ., கூடலூரில் 1.2 மி.மீ., உத்தமபாளையத்தில் 5 மி.மீ., பெய்தது. அணைக்குள் நீா்வரத்து 1,580 கன அடி தண்ணீா் வருவதால், லோயா்கேம்ப்பில் உள்ள நான்கு மின்னாக்கிகளில், 42, 26, 42, 42 என மொத்தம் 152 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT