தேனி

தேனியில் குளியலறையில் பெண்ணை படம் பிடிக்க முயன்றவா் கைது

DIN

தேனி: தேனி அல்லிநகரத்தில் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை செல்லிடப்பேசி மூலம் படம் பிடிக்க முயன்றவரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

தேனி அல்லிநகரம், குறிஞ்சிநகரைச் சோ்ந்த சண்முகம் மனைவி ராதிகா(33). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அய்யாச்சாமி மகன் சுரேஷ்(36). ராதிகா அவரது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது, சுரேஷ் குளியலறை ஜன்னல் இடுக்கில் தனது செல்லிடப்பேசியை வைத்து அவரை படம் பிடிக்க முயன்ாக கூறப்படுகிறது.

இது குறித்து தேனி காவல் நிலையத்தில் ராதிகா புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா். அவரது செல்லிடப்பேசியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT