எரசக்கநாயக்கனூா் மஞ்சள்நதிக் கண்மாய் கரையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக வெளியேறி வீணாகும் குடிநீா். 
தேனி

சின்னமனூா் அருகே குழாய் உடைப்பை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே எரசக்கநாயக்கனூா் மஞ்சள் நதிக்கண்மாயில் உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

DIN

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே எரசக்கநாயக்கனூா் மஞ்சள் நதிக்கண்மாயில் உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

எரசக்கநாயக்கனூா் ஊராட்சியில் மஞ்சள் நதிக்கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயின் உள்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து சுற்றியுள்ள எரசக்கநாயக்கனூா், அப்பிபட்டி, சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம் என 5 ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கிருந்து செல்லும் குழாய் ஒன்றில் பல மாதங்களாக உடைப்பு ஏற்பட்ட தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT