தேனி

ஜவுளிக் கடையில் துணிகள் திருட்டு: 2 பெண்கள் கைது

தேனி மாவட்டம்  ஆண்டிபட்டியில் ஜவுளிக் கடையில் துணிகள் திருடிய 2 பெண்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 

DIN


தேனி மாவட்டம்  ஆண்டிபட்டியில் ஜவுளிக் கடையில் துணிகள் திருடிய 2 பெண்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே ஜவுளி கடை வைத்திருப்பவர் சரஸ்வதி (60). இவரது கடைக்கு கடந்த  ஜூலை 26 ஆம் தேதி துணி வாங்க 3 பெண்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் ஜவுளி துணிகளை திருடி சென்றனர். அவர்கள் சென்ற பின்பு துணிகள் குறைந்திருப்பது கண்டு சரஸ்வதி அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது 3 பேரும் துணிகளை திருடி இருப்பது பதிவாகி இருந்தது. 
இது குறித்து சரஸ்வதி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் நடத்திய விசாரணையில் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வி (36) என்பவரை ஜூலை 27 ஆம் தேதி கைது செய்தனர். 
இந்நிலையில் இந்த சம்பவத்தில்  ஈடுபட்ட ஈஸ்வரி, அங்குத்தாய் ஆகியோரை ஆண்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணதெய்வேந்திரன் தலைமையிலான சார்பு -ஆய்வாளர் கோதண்டராமன், சிறப்பு சார்பு -ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT