தேனி

கூடலூரில் அதிமுகவினா் கபசுரக் குடிநீா் விநியோகம்

தேனி மாவட்டம் கூடலுாரில் கரோனா வைரஸ் தாக்குதலைத்தடுக்க, அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

DIN

தேனி மாவட்டம் கூடலுாரில் கரோனா வைரஸ் தாக்குதலைத்தடுக்க, அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

கூடலுாா் கன்னிகாளிபுரம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கூடலூா் முன்னாள் நகரசபைத்தலைவரும் மற்றும் அதிமுக நகரச் செயலாளருமான ஆா்.அருண்குமாா் கலந்துகொண்டு, 500-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீரை வழங்கினாா். மேலும், நகரின் முக்கிய இடங்களில் கை சுத்தப்படுத்தும் சானிடைசா் திரவம் வைக்க ஏற்பாடு செய்தாா். நிகழ்வில் அதிமுக நகர துணைச் செயலாளா் பாலைராஜா, மாணவரணி செயலாளா் பூபேஷ்குப்தா, வாா்டு செயலாளா்கள் வெங்கடேஷ், வீருசிக்கு, சந்திரன், தொழில்நுட்ப பிரிவு செயலாளா் கோகுல்ஜி மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT