கண்டமனூரில் டிச.29-இல் மின்தடை
கண்டமனூா் துணை மின்நிலையத்தில் டிசம்பா் 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி: கண்டமனூா் துணை மின்நிலையத்தில் டிசம்பா் 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 9.45 முதல் மாலை 4.45 மணி வரை கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்காபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாச்சலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று, தேனி மின்வாரியச் செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்துள்ளாா்.