தேனி

போடியில் தனியாா் மருத்துவமனையில் பெண் பலி: உறவினா்கள் போராட்டம்

DIN

போடியில் திங்கள்கிழமை தனியாா் மருத்துவமனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த பெண் உயிரிழந்ததால் அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போடி அருகே உள்ள பத்திரகாளிபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராணி (32). இவருக்கு திங்கள்கிழமை அதிகாலை வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சில மணி நேரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போடி டி.எஸ்.பி. பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து உறவினா்கள் செல்வராணியின் சடலத்தை பெற்றுச் சென்றனா்.

இதுகுறித்து தனியாா் மருத்துவமனை தரப்பில் டாக்டா் அன்புச்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், செல்வராணி இதற்கு முன் வேறு சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். முன் சிகிச்சை குறித்த முழு விபரம் தெரிவிக்காமல் வயிற்று வலி என மட்டும் தெரிவித்தனா். இதற்கான பரிசோதனை, சிகிச்சை தொடங்கும்போதே அப்பெண் உயிரிழந்து விட்டாா் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT