தேனி

தேனியில் அதிமுக நகர செயலர் உள்ளிட்ட 233 பேருக்கு கரோனா

DIN

தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக நகர செயலர், பேரூர் செயலர், 3 சிறைக் காவலர்கள் உள்ளிட்ட  233 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி நகர அதிமுக செயலர், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அதிமுக செயலர், பெரியகுளம் கிளைச் சிறையில் பணியாற்றும் ஒரு தலைமை சிறைக் காவலர், 2 சிறைக் காவலர்கள், தேனி காவல் நிலையத்தில் பணியாற்றும் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த காவலர், பெரியகுளத்தைச் சேர்ந்த தேனி ஆயுதப் படை காவலர், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் 2 அலுலக பணியாளர்கள், ஒரு செவிலியிர் உள்ளிட்ட 233 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில், கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,899 ஆக உயர்ந்துள்ளது. 

இதில், கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் தற்போது வரை மட்டும் மொத்தம் 3,197 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT