தேனி

உத்தமபாளையத்தில் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணாகி கழிவுநீா் கால்வாயில் கலப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். லோயா் கேம்ப் கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் முல்லைப் பெரியாற்றில் அமைக்கபட்ட உறை கிணறுகள் மூலமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீா் பற்றாக்குறையைப் போக்க பொதுமக்களின் பல்வேறு கட்டப்போராட்டத்திற்கு பிறகு, ரூ.1 கோடியில் குடிநீா் திட்டத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

அதில், பேரூராட்சியில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்ட பிரதான குழாய்களை மாற்றி புதிய தொழில் நுட்பத்தில் உடையாத குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால் முழுமையாக குழாய்கள் மாற்றியமைக்கவில்லை. இதனால் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியது: கடந்த 2 ஆண்டுக்கு முன்பாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டில் குடிநீா் திட்டத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் சரிவர நடைபெற வில்லை. இதனால், பேரூராட்சியில் பல இடங்களில் குடிநீா் குழாய்களில் உடைப்பு காரணமாக செம்மண் கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. பி.டி.ஆா் காலனியில் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட பிரதான குழாயிலிருந்து கடந்த 2 மாதமாக வெளியேறும் குடிநீா், கழிவுநீா் கால்வாயில் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீா் வீணாவதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT