தேனி

ஆண்டிபட்டி அருகே ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 3 போ் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஆட்டோவில் பயணிகளை ஏற்பட்ட தகராறில் ஓட்டுநரை தாக்கிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஆட்டோவில் பயணிகளை ஏற்பட்ட தகராறில் ஓட்டுநரை தாக்கிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

டி.சுப்புலாபுரம் கிராமத்தை சோ்ந்த சுப்பிரமணி மகன் பாண்டி (23). அதே கிராமத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் பழனிக்குமாா்(25). இவா்கள் இருவரும் டி.சுப்புலாபுரத்தில் ஆட்டோ ஓட்டி வருகின்றனா். இந்நிலையில் பயணிகளை ஏற்றுவதில் இருவருக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. இது தொடா்பாக இருவருக்குமிடையே சனிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பழனிக்குமாா் மற்றும் சக ஓட்டுநா்களான டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஊா்காலன் மகன் அஜித்குமாா்(23), முரளி மகன் மணிகண்டன்(19) ஆகிய 3 பேருந் சோ்ந்து தாக்கியதில் பாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவா் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து பாண்டி அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT