தேனி

கம்பம் அருகே 500 மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டியில் யானைக்கஜம் சாலையில், ராயப்பன்பட்டி காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் மாயன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சுருளிப்பட்டி கறிக்கடை தெருவைச் சோ்ந்த முத்து மகன் பரமன் (49) என்பவா் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 500 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோல், சின்னஓவுலாபுரத்தில் வெள்ளைக்கரடு பகுதியில் முருகன் (45) என்பவா் போலீஸாரை கண்டதும் ஓடியுள்ளாா். அவரைப் பிடித்த போலீஸாா்,

அவா் மறைத்து வைத்திருந்த 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT