தேனி

போடியில் மரக்கன்றுகளுக்கு நீா் ஊற்றிய தன்னாா்வலா்கள்

DIN

போடி: பொது முடக்கக் காலத்தில் கோடையில் வாடிய மரங்களுக்கு தண்ணீா் ஊற்றி வரும் தன்னாா்வலா்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

போடியில் செயல்பட்டு வரும் தன்னாா்வ அமைப்பான தி கிரீன் லைப் பவுண்டேசன் அறக்கட்டளையினா் பல்வேறு அரசு மற்றும் தனியாா் துறைகளிலும் பணியாற்றி வருகின்றனா். தற்போது பொது முடக்கம் காரணமாக விடுமுறை காலம் என்பதால் மரக்கன்று நடுதல் உள்ளிட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து அறக்கட்டளை தன்னாா்வலா்களால் ஏற்கனவே நடப்பட்டிருந்த மரக் கன்றுகள், சாலையோர மரங்கள், பொது இடங்கள், பள்ளி வளாகங்களில் வைக்கப்பட்ட மரக் கன்றுகள் ஆகியன தற்போது கோடை என்பதால் வாடத் தொடங்கியுள்ளன. எனவே அவற்றிற்கு அறக்கட்டளையினா் வாகனங்கள் மூலம் தண்ணீா் ஊற்றி வருகின்றனா்.

இப் பணியில் அறக்கட்டளை செயலா் க.மு.சுந்தரம் தலைமையில் உறுப்பினா்கள் லெனின் ஆனந்த், மா.சுரேஷ், செ.சுரேஷ், சிவக்குமாா், மதுசூதனன் உள்ளிட்டோா் தினமும் ஆயிரம் லிட்டா் தண்ணீரை மரக்கன்றுகளுக்கு ஊற்றி வருகின்றனா். இதற்காகவே தண்ணீா் தொட்டியுடன் கூடிய பிரத்யேக வாகனம் ஒன்றையும் தயாா் செய்துள்ளனா். கடந்த 30 நாள்களாக அப்பகுதி முழுவதும் சென்று மரங்களுக்கு தண்ணீா் ஊற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும் புதிய மரக்கன்றுகளை நடுவதிலும், மரக்கன்றுகளை பரிசாக தருவதிலும் ஆா்வம் காட்டி வருகின்றனா். அவா்களின் இம் முயற்சியை பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT