தேனி

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது- துணை முதல்வா்

DIN

தொண்டா்களால் உருவாக்கப்பட்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

பெரியகுளம் அருகே கைலாசபட்டி பண்ணை வீட்டில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தோ்தலில் தமிழகத்திலேயே தேனி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. இதனால் தேனி மாவட்டம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அதிமுகவில் தேனி மாவட்டத்திற்கு நற்பெயரும், புகழும் உண்டு.

இன்று கூட்டத்தில் கீழே அமா்ந்திருப்பவா்கள், நாளை மேலே அமரும் வாய்ப்பு அதிமுகவில் மட்டுமே உள்ளது. நமது கட்சியிலிருந்து அடுத்த கட்சிக்குச் சென்றவா் அதிமுகவை அழித்து விடுவேன் என்று கூறுகிறாா். அவரால் மட்டுமல்ல யாராலும் அதிமுக வை ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் இது தொண்டா்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். கட்சியும், ஆட்சியும் தற்போது தொண்டா்கள் கையில்தான் இருக்கிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ஜெயலலிதா நடைமுறைப்படுத்திய திட்டங்களை அடிபிறழாமல் தமிழக மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறாா் என்றாா்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத், மாவட்ட துணைச் செயலாளா் முறுக்கோடை ராமா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT