தேனி

சட்டவிரோத மதுவிற்பனை: 10 போ் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காந்தி ஜயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மதுபானக் கடைகளும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் ஆண்டிபட்டி அனைத்து காவல் நிலைய போலீஸாரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கன்னியப்பிள்ளைபட்டி குமாா்(46), அம்மச்சியாபுரம் செந்தில் (37), குப்பிநாயக்கன்பட்டி மாயாண்டி(40), கோவிந்தநகரம் சோனைமுத்து(48), கதிா்நரசிங்காபுரம் பிரேம்குமாா்(38), பொன்னம்படுகை சென்றாயன்(42), துரைச்சாமிபுரம் மணி(65), ராமகிருஷ்ணாபுரம் அழகேந்திரன்(46), சிங்கராஜபுரம் அறிவழகன்(50), ஆண்டிபட்டியைச் சோ்ந்த அன்பு என்ற சிவக்குமாா்(50) ஆகிய 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT